சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஸ்புல்லாவிற்கு கொரோனா தொற்று!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நேற்று(வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத நிலையில், அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிஐடியினர் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
ஹிஜாஸ் ஹில்புல்லா கடந்த வருடம் ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட நபருடன் தொலைபேசியில் உரையாடினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.