சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என கூறவில்லை – யாழ். கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபனம் விளக்கம்
In இலங்கை April 17, 2019 5:32 am GMT 0 Comments 1896 by : Dhackshala

பிற மதங்களை இழிவுபடுத்தும் வகையில் தாம் செயற்படவில்லை என்றும் அதற்கான தேவை தமக்கு இல்லை எனவும் யாழ்ப்பாணம் கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபனங்கள் ஐக்கியம் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாநகர சபை மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் இன்று (புதன்கிழமை) வரையில் நடைபெறும் மத நிகழ்வில், ஏனைய மதங்களை நேரடியாக இழிவு படுத்தபடுகின்றது எனவும், சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என பரப்புரை செய்கிறார்கள் எனவும் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தார்.
மேலும் இதன் காரணமாக அந்த நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து விளக்கமளிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும், “நாம் எந்த மதத்தையும் இழிவு படுத்தவில்லை. அதற்கான தேவையும் எமக்கு இல்லை. பிற மதங்களை இழிவுபடுத்தும் எந்த செயற்பாட்டிலும் நாம் ஈடுபடவில்லை. பிற மதங்களை இழிவுபடுத்தும் எந்த கருத்துக்களையும் நாம் வெளியிடவில்லை. உரிய தரப்பினர்களிடம் உரிய அனுமதிகளை பெற்றே நிகழ்வுகளை நடாத்தினோம். திட்டமிட்டபடி எமது நிகழ்வுகள் நடைபெற்றன” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வை
-
கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 714 முன்களப் பணிய
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா
-
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு
-
தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூச
-
ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin La
-
தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள
-
நாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில்
-
இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல்