சீனாவின் அச்சுறுத்தலை இந்தியா திறம்பட எதிர்கொள்கிறது – அமெரிக்கா
In இந்தியா January 6, 2021 5:42 am GMT 0 Comments 1317 by : Krushnamoorthy Dushanthini

சீனாவின் நீண்டகால அச்சுறுத்தலை இந்தியா திறம்பட எதிர்கொள்வதாக, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க-இந்தியா கூட்டாண்மைக்கான லட்சியம் மற்றும் சாதனை குறித்து தனது பிரியாவிடை உரையில், கருத்துரைத்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ஆண்டு முழுவதும் சீனாவின் ஆக்கிரமிப்பை இந்தியா எதிர்கொண்டு வருவதையும் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாகவே இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் ராணுவம் மற்றும் பிற துறைகளிலும் நல்லுறவு மேம்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்காவைப் போலவே, எந்தவொரு நாடும் இந்தியாவுடன் வலுவான பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறவைக் கொண்டிருக்கவில்லை என்றும் கென்னத் ஜஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு ஸ்திரத்தன்மை, தலைமைத்துவம் மற்றும் பிற நாடுகளின் இறையாண்மையை அச்சுறுத்தாத வளர்ச்சிக்கு ஒரு ஜனநாயக மாதிரி தேவை என்றும், அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கு, இந்தியா ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டிற்குள் அதிகமான இராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கான இந்தியாவின் விருப்பத்தை நாங்கள் உணர்கிறோம் எனவும், இந்த முயற்சியில் அமெரிக்கா வளர்ந்து வரும் கூட்டாட்சியை எதிர்பார்க்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இந்தியாவும் எங்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து நமது தேசத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும், நமது சொந்த எல்லைகளுக்கு அப்பால் பாதுகாப்பை வழங்கவும் இந்த ஒத்துழைப்பை நாங்கள் ஆழப்படுத்தியுள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.