சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 290 பேர் கைது
In இலங்கை November 17, 2020 8:01 am GMT 0 Comments 1412 by : Dhackshala

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 290 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்தே, கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதியிலிருந்து இது தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் மொத்தம் 290 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.