சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 970 பேர் கைது
In இலங்கை February 3, 2021 6:22 am GMT 0 Comments 1364 by : Dhackshala

சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து இதுவரை குறித்த குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 970 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்களிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.