சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 55 பேர் கைது
In இலங்கை December 15, 2020 4:10 am GMT 0 Comments 1494 by : Dhackshala
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் மேலும் 55 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக ஆயிரத்து 445 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இதேவேளை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கொவிட்-19 தனிமைப்படுத்தல் உத்தரவுகளை அமுல்படுத்துவதற்காக பொலிஸார் தொடர்ந்தும் தங்கள் கடமைகளை முன்னெடுப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.