சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்டவர்கள் கைது
In இலங்கை January 17, 2021 5:49 am GMT 0 Comments 1348 by : Dhackshala

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில், 2 ஆயிரத்து 578 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் குறித்த குற்றச்சாட்டுகளுக்காக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள ஆலோசனைகளைத் தொடர்ந்தும் கடைபிடிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.