சுன்னாகம் நிலத்தடிநீர் மாசு விவகாரம் – உயர்நீதிமன்றின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு
In ஆசிரியர் தெரிவு April 4, 2019 7:35 am GMT 0 Comments 3097 by : Jeyachandran Vithushan
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கில் நொதேர்ன் பவர் நிறுவனத்தை 20 மில்லியன் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வலிகாமத்தை அண்டிய பகுதிகளின் நிலத்தடி நீரை அசுத்தப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்றம், அந்த பிரதேசவாசிகள் 500 பேருக்கு இழப்பீடாக இந்த பணத்தை வழங்க இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
சூழல் மற்றும் இயற்கை ஆய்வு நிலையத்தின் சார்பில் பேராசிரியர் ரவீந்திர காரியவசத்தால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கு சில வருடங்களாக உயர்நீதிமன்றத்தில் நீடித்திருந்த நிலையில் இன்று முடிவு எட்டப்பட்டுள்ளது.
நொதேர்ன் பவர் நிறுவனத்தின் செயற்பாட்டால், வலிகாமம் பகுதி கிணறுகளில் எண்ணெய் மற்றும் கிரீஸ் கலப்பதால், குடிநீர் மாசடைவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், நொதேர்ன் பவர் நிறுவன மின் உற்பத்திக்கு தடைவிதித்ததுடன், வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தது. இந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அந்த பிரதேசவாசிகள் 500 பேருக்கு 20 மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப
-
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிர
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க
-
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’க்கு ஹங்கேரி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூ
-
உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகு
-
தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டு
-
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை மீட்பது போன்ற சவால்களைச் சமாளிக்க, புதிய அமெரிக்க நிர்வாக
-
தொற்றுநோயின் தாக்கம் காரணமாக, பிரிட்டிஷ் சில்லறை விற்பனை கடந்த ஆண்டு வரலாற்றில் மிகப் பெரிய வருடாந்த