சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டியெழுப்ப நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: நெதர்லாந்து
நெதர்லாந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை மீண்டும் கட்டியெழுப்ப, இலங்கையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து தூதுவர் ஜோன் டோர்னீவோர்ட் இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.
விஜேராமயிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு நெதர்லாந்து அரசாங்கம் மற்றும் நாட்டு மக்கள் சார்பில் தூதுவர் வருத்தத்தை தெரிவித்தார்.
அத்துடன், நெதர்லாந்து சுற்றுலாப் பயணிகள் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமாயின், நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் நெதர்லாந்து பிரஜையொருவரும் உயிரிழந்தார். அது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் நெதர்லாந்து தூதுவரிடம் கவலை தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா