சூடுபிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் – 5ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்!
In இந்தியா May 6, 2019 3:08 am GMT 0 Comments 2414 by : Krushnamoorthy Dushanthini

ஏழு கட்டங்களாக நடைபெற்றுவரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது
ஏழு மாநிலங்களுக்கான 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், பீகார், ஜார்கண்ட், காஷ்மீர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளதுடன், ஐந்தாம் கட்ட தேர்தலுடன் காஷ்மீர மற்றும் ராஜஸ்தான் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடையவுள்ளது.
இந்த தொகுதிகளை பொருத்தவரையில் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கும், மத்திய அமைச்சரான ஸ்மிரிதி இராணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அத்துடன் ரேபரேலி தொகுதியை பொருத்தவரையில் காங்கிரஸ் சார்பாக சோனியா காந்தி போட்டியிடும் அதேவேளை அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகின்றார்.
இதேவேளை லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுவதுடன், அவரை எதிர்த்து சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்கா சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
வாக்குப்பதிவுகளுக்காக 96 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.