சூரியனை ஆராய ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்
In இந்தியா May 3, 2019 7:15 am GMT 0 Comments 2572 by : Yuganthini

சூரியனை ஆராய ஆதித்யா எல்-1 விண்கலத்தை அடுத்த ஆண்டு இந்தியாவிலிருந்து விண்கலத்துக்கு ஏவவுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சிவன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“புயல் பாதிப்பு ஏற்படும்போது, அதனை தற்போது கணிக்க முடிந்துள்ளமையால் உயிர்ச்சேதம் உட்பட எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க முடிந்துள்ளது.
இதேவேளை சந்திராயன்-2 விண்கலம் எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிக்குள் விண்ணில் ஏவப்படும்.
மேலும் இந்த விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் இறங்கும் வகையில் திட்டம் வகுத்துள்ளோம்.
அந்தவகையில் சந்திராயன்-2 விண்கலம் தரை இறங்கியவுடன் நிலவின் நிலப்பரப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும். இதன் ஊடாக கிடைக்கும் கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ஆர்வமாக உள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் ஆண்டும் சூரியனை ஆராயும் வகையில் ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை ஏவுவதற்கு இஸ்ரோ மையம் திட்டமிட்டுள்ளது.
இதன்போது சூரியனை பற்றி இதுவரை தெரியாத பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும்” என சிவன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்
-
நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்