செர்பியாவில் கொவிட்-19 தொற்றினால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

செர்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு இரண்டாயிரத்து 5பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 40ஆவது நாடாக விளங்கும் செர்பியாவில், இதுவரை மொத்தமாக இரண்டு இலட்சத்து 26ஆயிரத்து 209பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 557பேர் பாதிக்கப்பட்டதோடு, 56பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 92ஆயிரத்து 668பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 383பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 31ஆயிரத்து 536பேர் பூரணமாக மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.