செர்பியாவில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

செர்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செர்பியாவில் மொத்தமாக ஒரு இலட்சத்து நான்காயிரத்து 97பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 58ஆவது நாடாக விளங்கும் செர்பயாவில் இதுவரை வைரஸ் தொற்றினால், மொத்தமாக ஆயிரத்து 110பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 71ஆயிரத்து 451பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 186பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை 31ஆயிரத்து 535பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.