ஜனாதிபதி பிரதமருடன் இந்திய உயர்ஸ்தானிகர் அவசர சந்திப்பு
In இலங்கை February 3, 2021 7:25 am GMT 0 Comments 1547 by : Jeyachandran Vithushan

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பானுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்ய இலங்கை அரசாங்கம் முடிவு செய்த ஒருநாள் கழித்து குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக த ஹிந்து இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு முழுக்க சொந்தமான கொள்கலன் முனையமாக கிழக்கு கொள்கலன் முனையத்தை இயக்க அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியிருந்தது.
கிழக்கு கொள்கலன் முனையத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிராக துறைமுக தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.
இந்நிலையில் அதன் செயற்பாட்டை 100 சதவீதம் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் வைத்திருக்க அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தனர்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பான் மற்றும் இந்தியாவுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தை இலங்கை கடைபிடிக்க வேண்டும் என்பது தனது நிலைப்பாடு என இந்தியா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.