ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – தயாசிறி ஜயசேகர
ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி தொடர்பாக இம்மாதம் 10ஆம் திகதி தீர்க்கமான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
அந்த கலந்துரையாடலின் பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.
அத்துடன் இம் முறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தினை கம்பஹா மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எதிர்வரும் 5ஆம் திகதியின் பின்னர் முன்னெடுக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண மற்றும் பிரசார செயலாளர் ரஞ்சித் சியம்பலாப் பிட்டிய ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்
-
நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்