ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் ஐந்து இலட்சத்து இரண்டாயிரத்து 300பேர் மீண்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை வைரஸ் தொற்றினால் எட்டு இலட்சத்து இரண்டாயிரத்து 944பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12ஆயிரத்து 692பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 14ஆயிரத்து 45பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 73பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 87ஆயிரத்து 952பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 385பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.