டைபாலாவை வாங்க மென்செஸ்டர் யுனைடெட் அணி பேச்சுவார்த்தை!
In உதைப்பந்தாட்டம் May 8, 2019 7:35 am GMT 0 Comments 2335 by : Anojkiyan

இத்தாலியின் முன்னணி கழக அணியான ஜூவெண்டஸ் கழக அணிக்காக விளையாடிவரும் பவுலோ டைபாலாவை வாங்குவதற்கு இங்கிலாந்தின் முன்னணி கழக அணியான மென்செஸ்டர் யுனைடெட் அணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் தலைசிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் மென்செஸ்டர் யுனைடெட். அணி, இந்த சீசனில் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் தவரிசையில் 6ஆவது இடம்பிடித்து யூரோ சம்பியன்ஸ் லீக் தொடருக்கான வாய்ப்பை இழந்தது.
இதனால் அணியை வலிமைப்படுத்த அந்த அணியின் பயிற்சியாளர் முடிவு செய்துள்ளார். இதனால் இத்தாலியின் தலைசிறந்த கழக அணியான ஜூவெண்டஸ் கழக அணிக்காக விளையாடிவரும் பவுலோ டைபாலாவை 85 மில்லியன் பவுண்ஸ்களுக்கு வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த முன்கள வீரரான டைபாலா, கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து ஜூவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
அவர் இதுவரை 125 போட்டிகளில் விளையாடி 57 கோல் அடித்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக 19 போட்டிகளில் களம் இறங்கி ஒரு கோல் அடித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸ
-
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால ச
-
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தனது கொள்கைக்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கப்படும் என இந்திய பி
-
வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை
-
வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவில் தஞ்சம் அடைந
-
முல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார
-
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள
-
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் (செவ்வாய்க்கி
-
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்
-
குஜராத் மாநிலம் சூரத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லொறி ஏறியதில் 13 பேர் உய