ட்ரோன் கண்காணிப்பு: மேல் மாகாணத்தில் 95 பேர் கைது
In இலங்கை November 17, 2020 8:11 am GMT 0 Comments 1794 by : Jeyachandran Vithushan
கொட்டாஞ்சேனை, வாழைத்தோட்டம், ஜா-எல மற்றும் வத்தளை பகுதிகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை மீறிய 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ட்ரோன் கண்காணிப்பு மூலமான நடவடிக்கையின்போதே குறித்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மாவட்டத்தில் தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ள.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தற்போது மேல் மாகாணத்தில் 24 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.