தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 23 பேர் கைது
In இலங்கை January 12, 2021 4:43 am GMT 0 Comments 1315 by : Yuganthini

கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 23பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப்பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 2438 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.