தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்தது!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 912 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்து 56 ஆயிரத்து 372ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இரண்டாயிரத்து 494 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக இதுவரை ஏழு இலட்சத்து 27 ஆயிரத்து 752 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
மேலும், கொரோனா தொற்றினால் இன்று 12 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 11 ஆயிரத்து 466ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 17 ஆயிரத்து 154 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, இன்று 69 ஆயிரத்து 594 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் இதுவரை ஒரு கோடியே ஏழு இலட்சத்து 27 ஆயிரத்து 683 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.