தமிழகத்தில் திங்கள் முதல் கல்லூரிகள் திறப்பு- கொரோனா தடுப்பு வழிகாட்டலை வெளியிட்டது அரசு

தமிழகத்தில் எதிர்வரும் ஏழாம் திகதி திங்கட்கிழமை முதல், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவுள்ளன.
கொரோனா பரவலை அடுத்து கடந்த மார்ச் முதல் குறித்த கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கல்லூரிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதால் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கல்லூரி நிர்வாகங்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், வாரத்தில் ஆறு நாட்கள் கல்லூரிகள் செயற்படும் என்றும், தொற்று அறிகுறிகள் இருந்தால் மாணவர்களை அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்துவரும் மாணவர்களை கல்லூரிகளில் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, கல்லூரி விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா