தமிழகத்தை புயல் தாக்கும் அபாயம்! – வானிலை ஆய்வு மையம்
In இந்தியா April 25, 2019 9:14 am GMT 0 Comments 2378 by : Krushnamoorthy Dushanthini

இந்திய பெருங்கடல் – வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், பின்னர் அது புயலாக மாறி தமிழகத்தின் கரையை கடக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன்படி இந்திய பெருங்கடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்பொழுது காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வுப்பகுதியானது அடுத்த 36 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்பு காணப்படுவதுடன், அது வலுப்பெற்று புயலாக மாறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்பட்டுள்ளதுடன், இந்த புயல் எதிர்வரும் 30ஆம் திகதி தமிழகத்தின் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புயல் கரையை கடக்கும் சந்தர்ப்பத்தில் மணிக்கு 90 கிலோமீற்றர் தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் குறித்த வானிலை ஆய்வு நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது சீரற்ற காலநிலை நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்