திருகோணமலையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 160ஆக அதிகரிப்பு
In இலங்கை January 3, 2021 6:32 am GMT 0 Comments 1587 by : Dhackshala

திருகோணமலை நகரப் பகுதியில் கடந்த 12 மணித்தியாலங்களில் 13 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி இதுவரையில், கோமரங்கடவல பகுதியில் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கிண்ணியாவில் 16 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், குச்சவெளியில் 2 பேரும் மூதூரில் 42 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேபோன்று சேருவில பகதியில் 3 கொரோனா நோயாளர்களும் தம்பலகாமம் பகதியில் 6 பேரும் திருகோணமலையில் 84 பேரும் உப்புவெளியில் 4 கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.