திருகோணமலையில் பாரிய போராட்டம் – உறவுகள் அழைப்பு
In இலங்கை April 16, 2019 11:26 am GMT 0 Comments 2525 by : Dhackshala
எதிர்வரும் 27ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
திருகோணமலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த போராட்டம், மட்டக்களப்பு காந்தி சிலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு அங்கிருந்து மனித உரிமை ஆணைக்குழுவை நோக்கி ஊர்வளமாக செல்லவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அரசியல் பிரமுகர்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவிதமான பதிலையும் வழங்காத நிலையில், சர்வதேசமே தமக்கான தீர்வை வழங்கும் என நம்பிருந்ததாகவும் எனினும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி சர்வதேசமும் தம்மை ஏமாற்றிவிட்டதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்