திருகோணமலை நகரை அண்டிய பகுதியில் 15 பேருக்கு கொரோனா தொற்று!

திருகோணமலை மாவட்டத்தின் நகரை அண்டிய பிரதேசத்தில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள தெரிவித்துள்ளார்.
இதன்படி, கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய திருகோணமலை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் மறு அறிவித்தல்வரை மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்களை முற்றாக கடைப்படித்தல் இன்றியமையாயதது என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல், கைகளைக் கழுவுதல், அநாவசிய பயணங்களைத் தவிர்த்தல் என்பவற்றைக் கடைப்பிடிக்குமாறு அரசாங்க அதிபர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.