திருடப்பட்டதாக கருதப்படும் 80 நாய்கள் பொலிஸாரால் மீட்பு!
In இங்கிலாந்து January 30, 2021 10:51 am GMT 0 Comments 1873 by : Anojkiyan

வேல்ஸில் திருடப்பட்டதாக கருதப்படும் 80 நாய்களை பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட 28 செல்லப்பிராணிகளை உரிமையாளர்களிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை கொள்ளைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக டைஃபெட்-போவிஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட பொருட்களை கையாண்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை சவுத் வேல்ஸ் பொலிஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், திருடப்பட்ட பொருட்களை கையாண்டதாக சந்தேகத்தின் பேரில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக டைஃபெட்-போவிஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணை தொடர்ந்து வருவதால், மீதமுள்ள நாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.