தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் உள்ளது
In இலங்கை January 20, 2021 11:32 am GMT 0 Comments 1671 by : Jeyachandran Vithushan

நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மக்களின் நீதிசார்ந்த அதிகாரங்கள் நாடாமன்றத்தின் ஊடாகவே நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்மையினால் தீர்ப்புகள் குறித்து விமர்சனங்களை முன்வைப்பதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், நீதிபதிகளின் தனிப்பட்ட விடயங்கள் அல்லாது அவர்களினால் வழங்கப்படும் தீர்ப்புகள் குறித்தே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஆகவே அவர்களினால் பெற்றுக்கொடுக்கப்படும் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என்றும் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.