தீவிரவாத நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டோம்: ஜப்பான்
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களுக்கு ஜப்பான் பிரதமர் சின்சோ அபே கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இத்தகைய தீவிரவாத செயற்பாடுகளை ஜப்பான் ஒருபோதும் மன்னிக்காதென குறிப்பிட்ட அவர், உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு தமது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். அத்தோடு, உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 290 பேர்வரை உயிரிழந்துள்ளனர். சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றைய குண்டுத்தாக்குதல்களில் ஜப்பான் பிரஜை ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும், அது தொடர்பாக போதிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனத்தை இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்