தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு இந்தியாவிலும் கண்டுப்பிடிப்பு!
In இந்தியா February 17, 2021 2:47 am GMT 0 Comments 1155 by : Krushnamoorthy Dushanthini

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்த 4 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு பிரித்தானியாவில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து குறித்த வைரஸ் இந்தியர்கள் சிலருக்கும் பரவி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் காணப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி இருப்பதாக தெரியவந்துள்ளது.
அங்கோலா, தன்சானியா, தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பேருக்கு தென் ஆப்பிரிக்க வைரஸ் தாக்கம் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பிரேசிலில் இருந்து இந்த மாதம் முதல் வாரத்தில் நாடு திரும்பிய ஒருவருக்கு பிரேசில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.