தெலுங்கானாவில் மண்ணுக்குள் புதையுண்டு 11 பேர் உயிரிழப்பு

தெலுங்கானாவில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 11 கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், மகபூப்நகர் மாவட்டம் திலேர் கிராமத்தில் இயந்திரம் மூலம் மண் எடுத்தபோது மண் சரிந்தது.
இதில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதையுண்டனர். இந்த விபத்தில் பெண்கள் உட்பட 11 கூலித்தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிகின்றவர்கள்.
தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், துரதிர்ஷ்டவசமாக நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த அதிர்ச்சி மற்றும் வேதனையடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்
-
பிக் பேஷ் ரி-20 தொடரின், 53ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்ற