தேடப்பட்டு வந்த வெடிபொருட்களுடனான வான் மற்றும் மோட்டார் சைக்கிள் மீட்பு
In இலங்கை April 24, 2019 7:48 am GMT 0 Comments 2576 by : Dhackshala

நாட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த வான் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளொன்றும் வரக்காபொல நகரில் உள்ள வீடொன்றில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் நேற்றிரவு இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வரக்காபொல – அங்குருவெல்ல வீதியின் மஸ்ஜிட் ஒழுங்கை – இலக்கம் 9 என்ற முகவரியில் உள்ள வீட்டிலேயே முதலில் 144 – 2446 என்ற இலக்கத் தகடினை உடைய செம்மஞ்சள் நிற மோட்டார் சைக்கிளொன்று மீட்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வான் ரக வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தொடர்பாடலுக்காக பயன்படுத்தப்படும் வோக்கி டோக்கி சாதனம் நான்கும் குறித்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதுடன், அவை அனைத்து செயற்பாட்டு தன்மையில் உள்ளது என பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த வீட்டிலிருந்த மொஹமட் ஜுனைட் மொஹமட் ஆமீன் என்ற 47 வயதுடைய சந்தேகத்துக்குரியவருடன் மற்றுமொருவரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ
-
டிசம்பர் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30,000பேர் வேலைகளை இழந்துள்ளதாக கனடியத் தேசிய வேலைவாய்ப்பு அற
-
நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய் தனது மடியில் உட்கார்ந்து இர
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி தகுதியான வேறு ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அத
-
பூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்டவிரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்
-
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழ
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51ஆயிரத்தை கடந்துள்ளது என சுகாதார