தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறியது ராஜஸ்தான்!

ஐ.பி.எல் தொடரின் 53ஆவது போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான குறித்த போட்டி நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அந்த அணி சார்பில் ரியான் பராக் மாத்திரம் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்ததுடன் ஏனைய வீரர்கள் சொப்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் இஷாந்த் சர்மா மற்றும் அமித் மிஷ்ரா தலா 3 விக்கெட்டுக்களையும், டிரென்ட் பொல்ட் 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்தநிலையில் 116 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய டெல்லி அணி 16.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த தோல்வியுடன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்