நரேந்திர மோடி அரசியலமைப்புக்கு எதிராக செயற்படுகிறார்: மு.க.ஸ்டாலின்
In இந்தியா April 1, 2019 5:01 am GMT 0 Comments 3978 by : Yuganthini
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியலமைப்புக்கு எதிராகவே தொடர்ச்சியாக செயற்பட்டு வருகிறாரென தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
வேலூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மு.க.ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“மோடி ஒளிமயமான பிரதமரல்ல இருள்மயமான பிரதமர் ஆவார்.
மேலும் அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகளின் அதிகாரங்களை பறித்து, அதனை சிதைப்பதுதான் மோடியின் கொள்கையாக காணப்படுகின்றது.
அந்தவகையில் நீதிமன்றம், ஆளுநர், தகவல் ஆணையகம், பொலிஸ் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு மோடியின் ஊடாக நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.
இதேவேளை நாடாளுமன்றத்தில் இடம்பெறும் விவாதங்களில் மோடி கலந்துகொள்வதில்லை என்பதுடன் மாநிலங்களில் திகழும் முக்கிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று
-
இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப்
-
சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் முதல் நபராக, கம்போடிய பிரதமர் ஹூன்சென் செலுத்திக்கொண்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90ஆயி
-
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணி 113 ஓட்டங்க
-
வவுனியா – குஞ்சுக்குளத்தில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு
-
கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குறித்து மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாக
-
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்ற
-
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மூவாயிரத்து எண்ணூறு ஏக்கருக்கும் மேற்