நாட்டில் இன்று மட்டும் 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று மட்டும் 618 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 491 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 27 ஆயிரத்து 552 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இன்னும் எட்டாயிரத்து 944 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் இன்று கொரோனா தொற்றினால் ஆறு பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்புக்கள் 171 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.