நாட்டில் இன்று மட்டும் 622 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று மட்டும் 622 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்தைக் கடந்த 34 ஆயிரத்து நூறாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 558 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 24 ஆயிரத்து 867பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் ஒன்பதாயிரத்து 79 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில், கொரோனா தொற்றினால் இதுவரை 154 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.