நாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு !
In இலங்கை January 27, 2021 12:08 pm GMT 0 Comments 1488 by : Jeyachandran Vithushan

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதுவே நாளொன்றுக்கு பதிவாகிய அதிகபட்ச எண்ணிக்கை என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 566 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 922 ஆக காணப்படுகின்றது.
இதில் 7 ஆயிரத்து 68 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 863 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.