நாட்டில் கொரோனா தொற்றின் அபாயம் குறையவில்லை – ஹேமந்த ஹேரத்
In இலங்கை November 24, 2020 5:40 am GMT 0 Comments 1349 by : Jeyachandran Vithushan

நாட்டில் கொரோனா தொற்று சுமூகமான நிலையை அடைந்துள்ளது என உறுதியாகக் கூற முடியாது என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து உறுதியாகக் கூற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர்இவ்வாறு கூறினார்.
மேலும் நாளொன்றுக்கு அடையாளம் காணப்படும் நோயாளிகளில் பெருமளவானோர் மேல் மாகாணத்திலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலுமே அடையாளம் காணப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது ஏனைய பிரதேசங்களில் குறைந்தளவான நோயாளிகளே அடையாளம் காணப்படுகின்றபோதும் எதிர்வரும் நாட்களில் அதிகளவான பரிசோதனைகளை முன்னெடுப்பதே தமது இலக்கு என்றும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழ
-
வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய
-
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத
-
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத
-
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப
-
மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடு