நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில், மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, கொழும்பைச் சேர்ந்த 62 வயதான ஆணொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று உயிரிழந்துள்ளார்.
இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கோமாஹம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார் என்பதுடன் இவரது மரணத்துக்கான காரணம், கொரோனா தொற்று நிமோனியா நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு-13 ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்த 77 வயதான ஆணொருவரும் இன்று உயிரிழந்துள்ளார்.
இவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கோமாஹம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இவரது மரணத்துக்கான காரணம் கொரோனா தொற்று மற்றும் நீரிழிவுடன் இரத்தம் நஞ்சானமையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 142ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.