நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான ஆணொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
இவர், கடந்த 21ஆம் திகதி அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இறப்புக்கான காரணம் கொரோனா தொற்று, இரத்தம் நஞ்சானமை மற்றும் புற்றுநோய் நிலையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 184ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.