நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, கொழும்பு-புறக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஆணொருவர் கொரோனா தொற்றினால் கடந்த 26ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு பொது வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இவரது இறப்புக்கான மரணம் கொரோனா தொற்று நிமோனியா என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைவிட, ராகம பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 26ஆம் திகதி உயிரிழந்தார்.
இவர், ராகம போதனா வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவரது இறப்புக்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியா மற்றும் மூளையில் தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 78 வயது பெண்ணொருவரும் கொரோனா தொற்றினால் கடந்த 25ஆம் திகதி உயிரிழந்தார்.
இவர், ராகம போதனா வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இவரது மரணத்துக்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வவுனியாவைச் சேர்ந்த 52 வயது பெண்ணொருவரும் கடந்த 26ஆம் திகதி உயிரிழந்தார்.
இவர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவரது மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியா மற்றும் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 191ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.