நாட்டில் மேலும் 214 பேருக்கு கொரோனா தொற்று
In இலங்கை November 14, 2020 11:45 am GMT 0 Comments 1507 by : Jeyachandran Vithushan

நாட்டில் மேலும் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 293 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 324 ஆக காணப்படுகின்றது.
தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 28 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 458 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.