நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 276 பேர் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கன் எனவும் ஏனைய 72 பேரும் சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்க்ள என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 407ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 582 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 29 ஆயிரத்து 882 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இன்னும் எட்டாயிரத்து 342 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 183 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.