நாட்டில் மேலும் 743 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

நாட்டில் மேலும் 743 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 566 ஆகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரை 78 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில், இன்னும் ஐயாயிரத்து 424 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் இதுவரை 430 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.