நான்கு மதங்களுக்கும் இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்

புத்தசாசனம், மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், நான்கு மதங்களுக்குமான இணைப்பாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இந்து மத மற்றும் கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளராக கலாநிதி சிவசிறி பாபு சர்மா குருக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
முஸ்லிம் மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளராக அஸ்-ஸெய்யத் அஸ்-செய்க்ஹ் கலாநிதி ஹஸன் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
கிறிஸ்தவ மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளராக அருட்தந்தை கலாநிதி சிக்ஸ்டன் குருகுலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்குக் பொறுப்பான இணைப்பாளராக கலாநிதி அங்ரஹாரே கஸ்ஸப நாயக்க தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.