நாவிதன்வெளி பகுதி வீடுகளில் தனிமைப்படுத்தி உள்ளவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் விநியோகம்!
In இலங்கை November 11, 2020 9:18 am GMT 0 Comments 1385 by : Vithushagan
கொரோனா நோய்த் தாக்கத்தின் காரணமாக தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்குத் தேவையான 10000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவினால் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதனடிப்படையில் நாவிதன்வெளி பிரதேச செயலக பகுதிகளில் கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 21 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் கலந்து கொண்டதோடு கிராம சேவர்களிடம் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.அத்தோடு நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா, கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் குறித்த உணவு பொதியில் அரிசி ,பருப்பு ,சீனி ,பால் மா ,கோதுமை மா ,பிஸ்கட் ,பாசிப்பயறு ,கடலை சோயா, வெங்காயம் ,டின் மீன், நெத்தலி ,உப்பு ,நூடில்ஸ் ,தேயிலை, மிளகாய்த்தூள் ,என்பன உள்ளடங்கியுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.