நிவர் புயல் நெருங்குகிறது- தமிழகம், புதுச்சேரியில் மீட்புப்படை தயார் நிலையில்

நிவர் புயல் தொடர்ந்து கரையை நோக்கி நகர்வதுடன் அடுத்த ஆறு மணிநேரத்தில் குறித்த புயல் தீவிர புயலாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புயல் மற்றும் கனமழையினால் ஏற்படும் சேதங்களின்போது, மீட்புப் பணிகளில் ஈடுபட, தமிழ்நாட்டிற்கு 12 குழுக்களை தேசிய பேரிடர் மீட்புப் படை அனுப்பியுள்ளது.
இந்நிலையில், மொத்தமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 30 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நிவர் புயலால் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்கவும், பேரிடர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் கடலோரக் காவற்படையும், இந்தியக் கடற்படையும் தயார் நிலையில் உள்ளன.
இதன்படி, கடலோர காவற்படையின் நான்கு கப்பல்களும் இரண்டு டோர்னியர் விமானங்களும் தயார் நிலையில் விசாகப்பட்டினத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிவர் புயலின் தாக்கம் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள