நீதி கிடைக்கும்வரை நாடாளுமன்றில் கருப்புப் பட்டியை அணியவுள்ளதாக ஹரின் அறிவிப்பு
In இலங்கை January 20, 2021 9:15 am GMT 0 Comments 1705 by : Jeyachandran Vithushan
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்கும்வரை நாடாளுமன்றில் கருப்புப் பட்டியை அணியவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ இவ்வாறு கூறினார்.
மேலும் தான் நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் விமர்சிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் மாறாக தனது நண்பனுக்கு இழைக்கப்பட் அநீதிக்கே குரல் கொடுப்பதாக ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் தற்போது வர்த்தமானி வெளியிடும் கலாசாரம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாகக் கூறினாலும் எந்தவொரு கடையிலும் விலைகள் குறைக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளித்து இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போதும் இன்று பயங்கரவாதி ஒருவரின் தொழிற்சாலையில் வேலை செய்த 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.