நெதர்லாந்தில் ஜனவரி மாத ஆரம்பத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்!

நெதர்லாந்தில் ஜனவரி மாத ஆரம்பத்தில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் தடுப்பூசி போடப்படுமென சுகாதாரத் துறை அமைச்சர் ஹியூகோ டீ ஜோங்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் கூறுகையில், ‘ஃபைஸர்- பயோடெக் நிறுவனங்களின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த ஐரோப்பிய ஓன்றியத்தின் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்த பிறகு, அந்த மருந்தை நெதர்லாந்து மக்களுக்குச் செலுத்தும் பணிகளைத் தொடங்குவோம்.
அடுத்த மாதம் 8ஆம் திகதி முதல் அந்தப் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக, மிகுந்த கவனத்துடன் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். முதலில் மருத்துவப் பணியாளர்களுக்கு அந்தத் தடுப்பூசி செலுத்தப்படும்’ என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.