நேற்று மட்டும் 468 பேருக்கு கொரோனா தொற்று – 282 பேர் கொழும்பில் அடையாளம்!
In இலங்கை November 14, 2020 6:55 am GMT 0 Comments 1422 by : Jeyachandran Vithushan

இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 468 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 282 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 75 பேர் சிறை கைதிகள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 43 பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் 17 பேர் பொலிஸார் என்றும் 10 பேர் களுத்துறை மாவட்டத்தையும் சேந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 191 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 11 ஆயிரத்து 31 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 ஆயிரத்து 107 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 53 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.