நேற்று 628 பேருக்கு கொரோனா தொற்று: கொழும்பில் மட்டும் 402 பேர் அடையாளம்!
In இலங்கை December 4, 2020 4:15 am GMT 0 Comments 1876 by : Jeyachandran Vithushan

இலங்கையில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 628 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 402 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் அதில் 104 பேர் வெலிக்கடை மற்றும் 52 பேர் தெமட்டகொடவை சேர்ந்தவர்களாவர்.
அத்தோடு 66 பேர் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என்றும் இரத்தினபுரியில் 35 பேரும் களுத்துறையில் 30 பேரும் காலியில் 15 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் அம்பாறையில் 14 பேரும் கேகாலையில் 07 பேருக்கும் குருநாகலில் 04 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு அனுராதபுரம் மற்றும் மாத்தறையில் தலா 2 பேரும் கண்டி, நுவரெலியா, முல்லைத்தீவு, மொனராகலை, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 38 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 19 ஆயிரத்து 32 பேர் குணமடைந்துள்ளதுடன் 6ஆயிரத்து 877 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 129 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.